For this Day:

;

Thirukural : Sengonmai - 6

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

மு.வ உரை உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதி்ருக்குமாயின்.

கலைஞர் உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதி்ருக்க வேண்டும்.

Explanation:
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

No comments: