For this Day:

;

Thirukural : 3.1.3.2

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 
தன்நோய்க்குத் தானே மருந்து.

மு.வ. உரை:
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

கலைஞர் உரை:
நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை:
நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

Explanation:
The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

Thought for Today

Quote of the day

"Social security, bank account, and credit card numbers aren't just data. In the wrong hands they can wipe out someone's life savings, wreck their credit and cause financial ruin."
-Melissa Bean

Thirukural : 3.1.4.1

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 
மென்னீரள் யாம்வீழ் பவள்.

மு.வ. உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

கலைஞர் உரை:
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

சாலமன் பாப்பையா உரை:
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!

Explanation:
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.

A Thought for Today

"I believe that through knowledge and discipline, financial peace is possible for all of us."
-Dave Ramsey

Thirukural : 3-1-3-10

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

மு.வ. உரை:
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

கலைஞர் உரை:
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.

Explanation:
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.

Thought for Today

"The financial markets generally are unpredictable. So that one has to have different scenarios... The idea that you can actually predict what's going to happen contradicts my way of looking at the market."
--George Soros

Thirukural : 3.1.3- 8

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை 
போழப் படாஅ முயக்கு.

மு.வ. உரை:
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

கலைஞர் உரை:
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

Explanation:
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

A Thought for Today

"If you create incredible value and information for others that can change their lives - and you always stay focused on that service - the financial success will follow."
-Brenden Burchard

Thought for Today

"The theory of democratic government is not that the will of the people is always right, but rather that normal human beings of average intelligence will, if given a chance, learn the right and best course by bitter experience."
-W.E.B. Du Bois, educator, civil rights activist, and writer (23 Feb 1868-1963)

Thirukural : 3.1.3.7

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் 
அம்மா அரிவை முயக்கு.

மு.வ. உரை:
அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

கலைஞர் உரை:
தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

சாலமன் பாப்பையா உரை:
அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

Explanation:
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

Thirukural : 3-1-3-6

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

மு.வ. உரை:
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கலைஞர் உரை:
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.

சாலமன் பாப்பையா உரை:
இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

Explanation:
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

Thought for Today

“When you see a merger between two giants in a declining industry, it can look like the financial version of a couple having a baby to save a marriage."
-Adam Davidson

A Thought for Today

"May the stars carry your sadness away. May the flowers fill your heart with beauty. May hope forever wipe away your tears, and above all, may silence make you strong."
-Chief Dan George

Thirukural: 3-1-3-5

வேட் ட பொழுதின் அவையவை  போலுமே
தோட் டார் கதுப்பினாள்  தோள்.

மு.வ. உரை:
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

கலைஞர் உரை:
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

சாலமன் பாப்பையா உரை:நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

Explanation:
The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

THOUGHT FOR TODAY

"There is nothing worse than a sharp image of a fuzzy concept."
-Ansel Adams, photographer (20 Feb 1902-1984)

A Thought for Today

"No one's ever achieved financial fitness with a January resolution that's abandoned by February."
-Suez Armaan

Thirukural : 3-1-3-4

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்  தீயாண்டுப் பெற்றாள் இவள்.

மு.வ. உரை:
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

கலைஞர் உரை:
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

Explanation:
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

A Thought for Today

"When you're in a Slump, you're not in for much fun.
Un-slumping yourself
is not easily done."
- Dr. Seuss

THOUGHT FOR TODAY

"Architecture is inhabited sculpture."
-Constantin Brancusi, sculptor (19 Feb 1876-1957)

Thirukural : 3-1-3-3

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்  தாமரைக் கண்ணான் உலகு.

மு.வ. உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

கலைஞர் உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

Explanation:
Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

Thought for Today

"If there's a book you really want to read but it hasn't been written yet, then you must write it."
-Toni Morrison, novelist, editor, professor, Nobel laureate (b. 18 Feb 1931)

Thirukural : 3-3 - 2

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை  தன்நோய்க்குத் தானே மருந்து.

மு.வ. உரை:
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

கலைஞர் உரை:
நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை:
நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

Explanation:
The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

Thought for Today

Time is the fairest and toughest judge.
-Edgar Quinet, historian (17 Feb 1803-1875)

A THOUGHT FOR TODAY

"A teacher affects eternity; he can never tell where his influence stops."
-Henry Adams, historian and teacher (16 Feb 1838-1918)

Thirukural : 3-2-3-1

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்  ஒண்தொடி கண்ணே உள.

மு.வ. உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

கலைஞர் உரை:
வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.

சாலமன் பாப்பையா உரை:
விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

Explanation:
The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).

Thirukural : Kuripparidhal - 10

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்  என்ன பயனும் இல.

மு.வ. உரை:
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

கலைஞர் உரை:
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

சாலமன் பாப்பையா உரை:
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

Explanation:
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).

A Thought for Today

“Price is what you pay. Value is what you get.”
- Warren Buffett

Thirukural : Kuripparidhal - 9

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்  காதலார் கண்ணே உள.

மு.வ. உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

கலைஞர் உரை:
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Explanation:
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

Thought for Today

In some circumstances, the refusal to be defeated is a refusal to be educated.
-Margaret Halsey, novelist (13 Feb 1910-1997)

A Thought for Today

What for centuries raised man above the beast is not the cudgel but the irresistible power of unarmed truth.
-Bois Pasternak, poet and novelist (1890-1960)

Thirukural : Kuripparidhal - 8

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்  பசையினள் பைய நகும்.

மு.வ. உரை:
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

கலைஞர் உரை:
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

சாலமன் பாப்பையா உரை:
யாரே? எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

Explanation:
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

Thought for Today

"If you want to reap financial blessings, you have to sow financially."
-Joel Osteen

A Thought for Today

"The difference in mind between man and the higher animals, great as it is, certainly is one of degree and not of kind."
-Charles Darwin, naturalist and author (12 Feb 1809-1882)

Thirukural : Kuripparidhal -7

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்  உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

மு.வ. உரை:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

கலைஞர் உரை:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

Explanation:
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

Thirukural : Kuripparidhal - 6

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்  ஒல்லை உணரப் படும்.

மு.வ. உரை:
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

கலைஞர் உரை:
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

.Explanation:
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

Thirukural : Kuripparithal - 2

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்  செம்பாகம் அன்று பெரிது.

மு.வ. உரை:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

கலைஞர் உரை:
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

Explanation:
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

Thirukural : குறிப்பறிதல் - 5

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்  சிறக்கணித்தாள் போல நகும்.

மு.வ. உரை:
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

கலைஞர் உரை:
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

சாலமன் பாப்பையா உரை:
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

Explanation:
She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

A Thought for Today

"Activism is the rent I pay for living on the planet."
-Alice Walker, author (b. 9 Feb 1944)

Thirukural : Kuripparidhal - 4

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்  தான்நோக்கி மெல்ல நகும்.

மு.வ. உரை:
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

கலைஞர் உரை:
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

சாலமன் பாப்பையா உரை:
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

Explanation:
When I look, she looks down; when I do not, she looks and smiles gently.

Thirukural : Kuripparidhal - 3

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்  யாப்பினுள் அட்டிய நீர்.

மு.வ. உரை:
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

கலைஞர் உரை:
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

Explanation:
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

Thought for Today

“My feeling is that maintaining financial independence is also a healthy way to keep my feet on the ground.”
-Valerie Trierweiler

Thirukural : Kuripparidhal - 1

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு  நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

மு.வ. உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

கலைஞர் உரை:
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

சாலமன் பாப்பையா உரை:இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

Explanation:
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

குறிப்பறிதல்-1

Thirukural : Thagaiyananguruththal - 10

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்  கண்டார் மகிழ்செய்தல் இன்று.

மு.வ. உரை:
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

கலைஞர் உரை:
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

சாலமன் பாப்பையா உரை:
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

Explanation:
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

Thirukural : Thagaiyananguruththal - 9

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு  அணியெவனோ ஏதில தந்து

மு.வ. உரை:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

கலைஞர் உரை:
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

சாலமன் பாப்பையா உரை:பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?

Explanation:
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

A Thought for Today

"It takes a lot of time to be a genius, you have to sit around so much doing nothing, really doing nothing."
-Gertrude Stein, novelist, poet, and playwright (3 Feb 1874-1946)

Thirukural : Thagaiyananguruththal - 8

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்  நண்ணாரும் உட்குமென் பீடு.

மு.வ. உரை:
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

கலைஞர் உரை:
களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.

சாலமன் பாப்பையா உரை:
களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

Explanation:
On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

Thought for Today

"The absence of flaw in beauty is itself a flaw."
-Havelock Ellis, physician, writer, and social reformer (2 Feb 1859-1939)

Thirukural : thagaiyananguruththal -7

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்  படாஅ முலைமேல் துகில்.

மு.வ. உரை:
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

கலைஞர் உரை:
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.

சாலமன் பாப்பையா உரை:
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

Explanation:
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

Thirukural : Thagaiyananguruththal - 6

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்  செய்யல மன்இவள் கண்.

ம.வ. உரை:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

கலைஞர் உரை:
புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா உரை:
அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

Explanation:
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

A Thought for Today

"The worst distance between two people is misunderstanding!"
-Netra Parikh