For this Day:

;

Thirukural : Kuripparidhal - 8

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்  பசையினள் பைய நகும்.

மு.வ. உரை:
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

கலைஞர் உரை:
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

சாலமன் பாப்பையா உரை:
யாரே? எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

Explanation:
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

No comments: