For this Day:

;

Thirukural : Thagaiyananguruththal - 6

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்  செய்யல மன்இவள் கண்.

ம.வ. உரை:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

கலைஞர் உரை:
புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா உரை:
அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

Explanation:
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

No comments: