For this Day:

;

Thought for Today

"A man who views the world the same at fifty as he did at twenty has wasted thirty years of his life."
- Muhammad Ali

A Thought for Today

"Whenever you are angry, be assured that it is not only a present evil, but that you have increased a habit."
- Epictetus

Thirukural : Uzhavu - 2

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

மு.வ உரை உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

கலைஞர் உரை:
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

Explanation:
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.

Thought for Today

"From the deepest desires often come the deadliest hate."
-Socrates

A Thought for Today

"Let us never forget that government is ourselves and not an alien power over us. The ultimate rulers of our democracy are not a President and senators and congressmen and government officials, but the voters of this country."
- Franklin D Roosevelt

Share ur fav quotes with this awesome app! http://bit.ly/QuotesDBFree

Thirukural : Uzhavu - 1

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

மு.வ உரை உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

கலைஞர் உரை:
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

Explanation:
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

Thought for Today

"There are risks and costs to action. But they are far less than the long range risks of comfortable inaction."
- John F Kennedy

A Thought for Today

"As far as the laws of mathematics refer to reality, they are not certain, and as far as they are certain, they do not refer to reality."
- Albert Einstein

Thirukural : kudi seyalvagai - 10

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

மு.வ உரை உரை:
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

கலைஞர் உரை:
வரும் துன்பத்தை எதி்ர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்தி்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதி்யை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

Explanation:
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

Thought for Today

"Error is acceptable as long as we are young; but one must not drag it along into old age."
- Johann Wolfgang von Goethe

A Thought for Today

"No work or love will flourish out of guilt, fear, or hollowness of heart, just as no valid plans for the future can be made by those who have no capacity for living now."
- Alan Watts

Thirukural : Kudi Seyalvagai - 9

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

மு.வ உரை உரை:
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்தி்ற்கே இருப்பிடமானதோ.

கலைஞர் உரை:
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்தி்ற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்தி்ற்கும் இல்லையோ?.

Explanation:
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil?

Thought for Today

"When you start with a portrait and search for a pure form, a clear volume, through successive eliminations, you arrive inevitably at the egg. Likewise, starting with the egg and following the same process in reverse, one finishes with the portrait."
- Pablo Picasso

A Thought for Today

"Almost every man wastes part of his life attempting to display qualities which he does not possess."
- Samuel Johnson

Thirukural : Kudi seyalvagai - 8

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

மு.வ உரை உரை:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

கலைஞர் உரை:
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

Explanation:
As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.

Thirukural : Kudi seyal vagai - 7

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

மு.வ உரை உரை:
போர்க்களத்தி்ல் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

கலைஞர் உரை:
போர்க்களத்தி்ல் எதி்ர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
போர்க்களத்தி்லே எதி்ர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்தி்லும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

Explanation:
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.

Thought for Today

"Curiosity is lying in wait for every secret."
- Ralph Waldo Emerson

A Thought for Today

"We often say that the biggest job we have is to teach a newly hired employee to fail intelligently... to experiment over and over again and to keep on trying and failing until he learns what will work."
- Charles Kettering

Thirukural : Kudi seyal vagai - 6

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

மு.வ உரை உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

கலைஞர் உரை:
நல்ல முறையில் ஆளும் தி்றமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

Explanation:
A man's true manliness consists in making himself the head and benefactor of his family.

Thought for Today

"I have never met a man so ignorant that I couldn't learn something from him."
-Galileo

A Thought for Today

"I still live, I still think: I still have to live, for I still have to think."
-Friedrich Nietzsche

Thirukural : Kudi Seyalvagai - 5

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

மு.வ உரை உரை:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்தி்ற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி், மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

Explanation:
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

Thought for Today

"It's clearly a budget. It's got a lot of numbers in it."
-George W Bush

A Thought for Today

"The price of success is hard work, dedication to the job at hand, and the determination that whether we win or lose, we have applied the best of ourselves to the task at hand."
- Vince Lombardi

Thirukural : Kudi Seyalvagai - 4

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

மு.வ உரை உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

கலைஞர் உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் தி்றம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

Explanation:
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.

Thirukural

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

மு.வ உரை உரை:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கலைஞர் உரை:
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்தி்ட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

சாலமன் பாப்பையா உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்தி்க்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

Explanation:
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

A Thought for Today

"Analogies, it is true, decide nothing, but they can make one feel more at home."
-Sigmund Freud

Thought for Today

"Trust your instinct to the end, though you can render no reason."
- Ralph Waldo Emerson

A thought for today

"Man Made 'God' in his own image. The eternal, the infinate, the unnameable was reduced to a mental idol that you had to believe in and worship as 'my god' or 'our god'."
-Eckhart Tolle

Thirukural : Kudi Seyalvagai - 2

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

மு.வ உரை உரை:
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

கலைஞர் உரை:
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

Explanation:
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

கம்பராமாயணம் – சுஜாதா


1. கம்பராமாயணம் – சுஜாதா

இந்த விழாவில் (கோவை கம்பன் கழக விழா) பேசியவர்கள், பேசப் போகிறவர்கள் எல்லாரும் என்னைவிட அதிகமாக கம்பனைப் படித்து ஆராய்ந்து தேர்ந்தவர்கள். இவர்களுக்கிடையில் அரைகுறையான என்னை அழைத்துப் பேச வைத்திருப்பது, அதுவும் கம்பனைப் பற்றி பேச வைப்பதிலிருந்து நான் எவ்வளவு தூரம் தப்பாக மதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. இருந்தும் இந்தச் செயலை, இந்தப் பெரியவர்களின் பெருந்தன்மைக்கு உதாரணமாகக் கொண்டு தெரிந்ததைப் பேசுகிறேன்.

"கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்"
(படிக்காதவர் படித்தவர் முன் பேசாமல் இருப்பதே நல்லது)

என்று வள்ளுவர் எச்சரித்தாலும் "அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள் தரையில் கீறினால் தச்சரும்" காயமாட்டார்கள் என்று கம்பனே உத்தரவாதமாய் சொல்வதால் "ஆசை பற்றி" அறைகிறேன்.

கம்பராமாயணத்துடன் என் அறிமுகம் மற்ற எல்லா தமிழ் மாணவர்கள் போல பள்ளிப் பாடத்தில் தான் கிடைத்தது. எஸ்.எஸ்.எல்.சி. அப்போது இண்டர்மீடியட் கட்டாயப் பாடங்களில் கம்பராமாயணத்தின் சில உபத்திரவமில்லாத படலங்கள் திரும்பத் திரும்ப பாடமாக வைக்கப் படும். எனக்கு அயோத்தியா காண்டத்தில் கைகேயி சூழ் வினையும் குகப் படலமும் கிடைத்தது. மற்ற பேர் போல் "ஆழி சூழ் உலகமெல்லாம்" போன்ற பாடல்களை நெட்டுருப் போட்டாலும் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள், குறிப்பாக செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் ஐயம்பெருமாள் கோனார் கம்பனைப் பாடிப் பாடி சொல்லித் தருவார் இனிமையாக. அதனால் கம்ப ராமாயணத்தின் மற்ற பாடல்களைத் தேடித் பிடித்துப் படிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதனுடன் அப்போது நான்-டீடைல்டு பாடமாக "ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்" என்னும் புத்தகம் வைக்கப் பட்டிருந்தது. அதில் யுத்த காண்டத்தின் பல சிறந்த பாடல்கள் மேற்கோள்களாக காட்டியிருந்தது, அந்தச் சின்ன வயசிலேயே கம்பராமாயணம் ஒரு வித்தியாசமான நூல் என்பதை உணர வைத்தது. டி.கே.சி.யின் கம்பர் தரும் ராமாயணமும் கல்கி பத்திரிகையில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தது. அப்போது யாராவது ஜோசியர், அந்த இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்னும் நூலை எழுதிய பேராசிரியர் அ.ச.ஞா. அவர்களுடன் ஒரே மேடையில் நாற்பது வருஷம் கழித்துக் கம்பனைப் பற்றிப் பேசப் போகிறாய் என்று சொல்லியிருந்தால் எனக்கு ஜோஸ்யத்தில் நம்பிக்கை வந்திருக்கும்.

கம்பனின் சொல்லாக்கமும் சந்தமும் உவமைத் திறனும் தமிழில் இன்று எழுதும் அதனை எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எதாவது ஒரு விதத்தில் பாதித்திருப்பதை என்னால் நிரூபிக்க இயலும்.

ஆனால் அறிவியல் பயின்றவன் என்கிற ரீதியில் கம்பனில் உள்ள அறிவியல் கருத்துக்கள் என்னை வசீகரிக்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது பொருத்தமாகும் எனத் தோன்றுகிறது.

2. கம்பராமாயணம் – சுஜாதா

முதலில் என்னைக் கவர்வது கடவுள் தத்துவம். கம்பன், ஒவ்வொரு காண்டத்தின் ஆரம்பத்திலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலை வைத்திருக்கிறார். காவ்யம், ராமன் என்று அவதாரப் புருஷனைப் பற்றி இருந்தாலும், எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்று இராமனை பெருமான் ஸ்தானத்திற்கு போற்றி அடிக்கடி ஏற்றிச் சொன்னாலும், இந்தக் கடவுள் வாழ்த்துக்களில் கூறப்படும் கடவுள்கள் எல்லாம் மிகப் பொதுப் படையாகவே இருக்கின்றனர்.

"உலகம் யாவையும்" என்னும் முதல் பாட்டு உலக பிரசித்தம். எல்லாருக்கும் தெரியும். அதை விட மற்ற காண்டங்களின் அறிமுகப் பாடல்கள் அந்த அலகிலா விளையாட்டுடைய தலைவரை

"வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன்" என்றும்,

"வேதம் வேதியர் விரிஞசன் முதலோர் தெரிகிலா

ஆதி தேவர்"

என்றும், ஒரு காண்டத்தில் அதை விட,

"ஒன்றே என்னின்  ஒன்றே ஆம்

பலவென்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்றின் ஆமே ஆம்

இன்றே என்னின்  இன்றே ஆம்

உளதென்றுரைக்கின் உளதே ஆம்"

போன்ற வரிகள் நவீன  க்வாண்டம் இயற்பியலின் இறுதி சிந்தனையாக வெளிப்படும் எதிர் மறைகளின் ஒருமைப்பாடாக வெளிப்படும் கடவுள் தத்துவத்துக்கு ஒத்துப் போகிறது.

"தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை தன்னுளே நின்றுதாம் அவற்றுள் தங்குவான் பின்னிலன்  முன் இவன் ஒருவன் பேர்கிலன்" என்று சொல்லும் போது நவீன இயற்பியல் கருத்துக்களுக்கு வெகு அருகில் உள்ளது.

கம்பராமாயணத்தில் அன்றாட அறிவியல் செய்திகளும் அங்கங்கே கிடைக்கின்றன. அயோத்தி நகரத்து மதில்களை வருணிக்கும்போது "நால்வகைச் சதுரம் விதி முறை நாட்டிய" ஆர்க்கிட்டெக்சர்  கட்டிட இயல் இருக்கிறது. அப்போது தற்காப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் பட்டியல் இருக்கிறது.

"சினத்து அயில், கொலைவாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை, கனத்திடை உருமின் வெருவரும் கவண்கல்" என மேகத்தைத் தொடும் ராக்கெட்டுகள் கூட இருக்கிறது. கூர்ந்து கவனித்து பட்டியலிட்டிருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். குறிப்பாக உலக்கையை எப்படிப் பிரயோகித்தார்கள் என்று யோசிக்கலாம்.

சீதையின் திருமணத்தின் போது திருமணச் சடங்கில் மணலை விரித்து தருப்பை சாரதி மென்மலர் கொண்டு நெய் சொரிந்து எரிமுன் மூட்டி தாரை வார்த்தல், தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி காணல் என்று விரிவாக உரைத்திருந்தாலும் தாலி பற்றி ஒரு வார்த்தை இல்லை. அது ஏன் என்றும் மேற்படி ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கலாம்.

தசரதனுக்கு வருவது 'ஹார்ட் அட்டாக்'  என்று நம்ப இடம் இருக்கிறது.

"வேய் உயர் கானம் தானும் தம்பியும்

மிதிலைப் பொன்னும்

போயினான் என்றான் என்ற போழ் தத்தே

ஆவி போனான்"

என்று பொசுக்கென்று போய்  விடுகிறார்.

"நோயும் இன்றி நோன்  கதிர் வாள்

வேல் இவை இன்றி மாயும்"

என்று விரைவான மரணத்தை கம்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏரோப்ளேன் டேக் ஆஃபும் இருக்கிறது ஆரண்ய காண்டத்தில்.

"மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து

 விண்ணின் ஓங்கியது ஒரு நிலை"

என ராவணன் தேர் தரையில் ஓடி ஜிவ்வென்று எகிறிப் பறந்ததின் சுவடுகள் தெரிகின்றன.

3. கம்பராமாயணம் – சுஜாதா

ராமாயணத்தில் வேதியியல் இருக்கிறது.

"துள்ளியின் இரதம் தோய்ந்து தொல்நிறம் கரந்து வேறாய்
வெள்ளிபோல் இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார்"

என்னும்போது, பாதரசத்தின் ஒரு துளி பட்டால் வெள்ளியும் செம்பும் வேறுபடுத்தி விடலாம் என்ற ரசாயன செய்தி வருகிறது.

நம் நாட்டு நவீன போர்களில் போல் ஒற்றர்களை அனுப்பும் முறையும் தெரிய வருகிறது. ராவணன் அனுப்பிய ஒற்றன் வந்து,

"அளவு நோக்கி குரங்கென உழல்கின்றான்"

என்னும்போது எதிரிகள் போல வேஷம் மாற்றி அனுப்பும் வழக்கம் தெரிகிறது.

அந்த ஒற்றனை வீடணன் சுலபத்தில் கண்டுபிடித்து விட, அவனைக் கொன்று விட வேண்டும் என பலர் வற்புறுத்த, இராமன்,

"தாம் பிழை செய்தா ரேனம் தஞ்சம் என்று அடைந்தார் தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடுதீர்"

என்று விடுவிக்க அந்த ஒற்றனைப் பார்த்து,

"நோக்கினீர் தானை எங்கும் நுழைந்தனிர் இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லை ஆயின் அஞ்சல் என்று அவனை
போக்குமின் விரைவின் என்று அனுப்பி விட
"உய்ந்தனம்" என்று போனார்.

அம்மாதிரி போர்க் கைதிகளைக் கொல்லாத ஜெனீவா கன்வென்ஷனின் சாயல் இதில் தென்படுகிறது.

ராஜ்ஜியம் எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறும் அறிவுரைகள் இன்றைய ஹர்ஷத் மேத்தா விவகாரம் வரை செல்லுபடியாகிறது.

"புகையுடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உண்ணும்
மிகை உடைத்து இவ்வுலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பைக உடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்க"

என்று சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும்போது, அரசியலில் உள்ளவர்கள் முக்கியமாகப் பகைவர்களைப் பார்த்து கொஞ்சம் சிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த காலத்து "சிவில் இன்ஜினியரிங்" முறைகள் யுத்த காண்டத்தில் இலங்கைக்கு அணை கட்டும்போது தெரிகிறது.

குரங்குகள் சேர்ந்து அணை கட்டினால் எப்படி இருக்கும்?

"பேர்த்தன மலை சில பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
தூர்த்தன சில சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன சில சில ஆடிப் பாடின"

இந்தக் காலத்தில் பெரிய கட்டடம் கட்டும்போது ஏறக்குறைய இதுதான் நிகழ்கிறது. சிலர் பேர்க்கிறார்கள்; சிலர் இழுக்கிறார்கள்; சிலர் சும்மா சப்தம் போடுகிறார்கள். சிலர் ஐலசா பாடுகிறார்கள்.

"காலிடை ஒரு மலை உருட்டி கைகளின்
மேலிடை மலையினை வாங்கி விண்தொடும்
சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய
வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால்"

கம்பர் பக்கத்தில் இருந்து பாலம் கட்டுவதைப் பார்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

கம்பர் விவரிக்கும் மாயமான் ஒரு 'ரோபாட்' போல இயங்குகிறது.

"காயம் கனகம், மணி கால் செவி வால்,
பாயும் உருவொடு இது பண்பலாம் மாயம்"

என்று இலக்குவன் அதைச் சொல்ல இராமன்,

"நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன்உயிர்தாம்
பல்லாயிரம் கோடி பரந்துளதால்
இல்லாதன இல்லை இலக்குமரா"

என்று கம்பர் அந்த நாட்களிலேயே எதிர்காலத்து அதிசயங்களுக்கு வழி வகுத்துள்ளார்.

4. கம்பராமாயணம் – சுஜாதா

இவ்வாறு பல அறிவியல் பூர்வமான கருத்துக்களை – செய்திகளை – சொல்லிக் கொண்டே போகலாம். மருந்து இருக்கிறது. எப்படிப்பட்ட மருந்து ?

"மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்

உடல் வேறு வகிர்களாக

கீண்டாலும்  பொகுந்துவிக்கும் ஒருமருந்தும்

படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்

மீண்டேயும் தம்உருவை அருளுவதும் ஓர் மெய்ம் மருந்தும் உள வீர

ஆண்டேகி கொணர்தி"

லைஃப் சேவிங் டிரக்ஸ், பிளாஸ்டிக்  ஸர்ஜரி என்று பல கருத்துக்கள் தென்படுகின்றன இதில்.

கம்பன் காவியத்தில் தூரங்கள் யோசனைகளாக கணக்கிடப்பட்டன. யோசனை என்பது எத்தனை கிலோ மீட்டர் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசனை செய்யலாம்.

"எம் மலைக்கும் பெரிதாய வடமலை"

என இமயமலையைக் குறிப்பிட்டு,

"அம் மலையின் அகலம் எண்ணின்

மொய்ம்மறந்த திண் தோளாய்,

முப்பத்து ஈராயிரம் யோசனைகள்"

என்கிறார்.

மேருவிலிருந்து ஒன்பதாயிரம் யோசனை நீலகிரி, அதிலிருந்து நாலாயிரம் யோசனை மருந்து வைகும் கார்வரை என்னும்போது, எளிய  ஸர்வே முறைகள் அவர் காலத்திலிருந்திருக்க வேண்டும். இல்லையேல் முப்பத்து இரண்டாயிரம் என்று அதனை சரியாகச் சொல்ல முடியாது.

பிரம்மாஸ்திரத்தை வர்ணிப்பது அணு ஆயுதம் போல் தான் தெரிகிறது.

"கோடி கோடி நூறாயிரம் சுடர்க்கணைக் குழாங்கள்

மூடி மேனியைச் முற்றுறச் சுற்றின மூழ்க"

என்னும்போது மிகப் பெரிய ஆயுதம்தான் அது.

அதுபோல் இராமன் திரும்பும் புஷ்பக விமானத்தில் பல பேருக்கு இடம் இருக்கிறது.  போயிங் 747-ஐ விட பெரிசாக இருந்திருக்க வேண்டும்.

"சூரியன் மகனும் மன்னு வீரரும் எழுபது வெள்ள

வானரரும் கன்னி மாமதில் இலங்கை மண்ணோடு

கடற் படையும் துன்னினார் நெடும் புட்பக மிசை

ஒரு சூழல்"

என்று அந்தப் பெரிய விமானத்தில் இன்னமும் இடம் இருக்கிறதாம்.

"பத்துநால் என அடுக்கிய உலகங்கள் பலவின்

மெத்துயோனிகள் ஏறினும்  வெளியிடம்

 மிகுமால்…"

என்ன Space Station அளவுக்குச் சொல்கிறார்.

அனுமன் மருத்துவ மலையை எடுத்து வரச் செல்லும்போது நிஜமாகவே அல்ட்ராஸானிக் வேகத்தில்தான் சென்றிருக்க வேண்டும்.

"தோன்றினான் என்னும் அந்தச் சொல்லின்

முன்னம் வந்த ஊன்றினன்"

என்கிறார்.

இவ்வாறு பல கருத்துக்களைக் கொண்ட கம்பராமாயண காலத்தில் இந்தச் சாதனங்கள் எல்லாம் இருந்தன என்று சொல்ல வரவில்லை நான். அபார கற்பனை மிக்க ஒரு இலக்கிய கர்த்தாவால் எதிர்காலத்தை நோக்க முடியும் என்பதே என் வாதம்.

நாங்கள் எழுதும் 'சைன்ஸ் ஃபிக் ஷன்' எல்லாமே அதுதானே? கம்பன்தான் முதல்Science fiction எழுத்தாளன் என்பேன்.

5. கம்பராமாயணம் – சுஜாதா

கம்பனின் கருத்துக்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அவன் கண்ட யுடோப்பியா என்பேன். எல்லாருக்கும் ஒரு ஆதர்ச தேசம் உண்டு. ஒரு யுடோப்பியா, ஒரு எல்டெராடோ. நவீன விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களுக்கும் அவரவர் பார்வையில் ஆதர்ச தேசத்தின் மிக விஸ்தாரமான வர்ணனை இந்தப் பால காண்டத்தில் இருக்கிறது. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

சலுகை விலையில் கிடைக்கிறது. வாங்குபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் வாகன சௌகர்யங்களும் வடக்கு திசையிலிருந்து நற்செய்தியும் தனலாபமும் கிடைக்கும்.

ஆற்றுப் படலத்திலும், நகரப் படலத்திலும் கோசல நாடும், அயோத்யா நகரும் எந்த வகையில் சிறந்து இருந்தன என்று சொல்கிறார்.

"ஆலவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலைகீழ் கனியின் தேனும்
தொடைகிழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும்
வரம்பு இகந்து ஓடி வங்க
வேலைவாய் மடுப்ப
உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ"

என்று அக்காலத்து அயோத்தியில் தேன் பாய்ந்தது என்கிறார்.

இந்த நாட்களில் ரத்தம் பாய்கிறதை அவர் எதிர்பார்த்திருந்தால் ?

கோசல நாட்டை வர்ணிக்கும்போது கம்பர்,

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநீர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரையிலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்

(கம்ப ராமாயணம் 1 . 2 . 53 )

என்று கூறுகிறார். கோசல நாட்டில் கொடுப்பவர்களுக்கு கௌரவம் இல்லை என்று கூறுகிறார்.ஏன் ? கை நீட்டுபவர்களே இல்லை; கை நீட்டுபவர்கள் இருந்தால்தானே கொடுப்பவர்களுக்குப் பெருமை. உண்மைக்குக் கௌரவம் இல்லை.எல்லாரும் சத்திய சந்தர்கள். பண்டிதர்களுக்கும் கௌரவம் இல்லை; எல்லாரும் வித்வான்களாக இருக்கிறார்கள். பலத்துக்கு கௌரவம் இல்லை. எல்லாரும் பலவான்களாக இருக்கிறார்கள்.

கம்பர் இதையே இன்று வேறு விதமாக,

கடைகள் இல்லை ரேஷன் கார்டிலாமையால்,
விடைகள் இல்லை ஓர் வினாவிலாமையால்,
லஞ்சமில்லை ஓர் துரோகமின்மையால்,
லஞ்சமில்லை அரிசிப் பஞ்சமின்மையால்,
இச்சையில்லை ஓர் காமமின்மையால்,
பிச்சையில்லை எழ்மையின்மையால்,
வாயில் இல்லை குறுக்கு வழி இலாமையால்,
கோயில் இல்லை பாபர் மசூதி இலாமையால்"

என்று எழுத விரும்பியிருப்பார். நன்றி. வணக்கம்.

–முற்றும்.

கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி வெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

எளிய வடிவில் ராமாயணம்…முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்

எளிய வடிவில் ராமாயணம்…

ராமாயணக் கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் குமுதம் பக்தி ஸ்பெஷலுக்காகத் தொகுத்தவர் பெயர் ஜானகி (என்ன பொருத்தம்?) 

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான்!

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை ஆரண்யத்துக்கு
அனுப்பினாள்!

அங்கேயும் அபாயம், அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை
அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு,
அட்டூழியங்களுக்கு,
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்
அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக
அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அனேகமாக அணைந்தன. அன்னையின்
அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான்
அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு
அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான
அதிசாகசம்!

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

(ராமர் பட்டாபிஷேகம் ஓவியம் – ஹிந்து கேஷவ்)

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.

(பணிவின் எல்லையில் நிற்கும் இந்த அனுமனின் அழகுப் படம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்)

அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!

–நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல், பொருத்தமான படங்கள் தந்து உதவிய Google

A Thought for Today

"There is nothing new in the world except the history you do not know."
-Harry S Truman

Thirukural : Kudi Seyal Vagai

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

மு.வ உரை உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை:
உரிய கடமையைச் செய்வதி்ல் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதி்கொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

Explanation:
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

Thought for Today

"We have not given science too big a place in our education, but we have made a perilous mistake in giving it too great a preponderance in method in every other branch of study."
- Woodrow Wilson

A Thought for Today

"I cannot always control what goes on outside. But I can always control what goes on inside."
-Wayne Dyer

Thirukural : Naanudamai - 10

நாண்அகத் தி்ல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

மு.வ உரை உரை:
மனத்தி்ல் நாணம் இல்லாதவர் உலகத்தி்ல் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

கலைஞர் உரை:
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தி்ல் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

Explanation:
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.

Thought for Today

"Letting go gives us freedom, and freedom is the only condition for happiness. If, in our heart, we still cling to anything - anger, anxiety, or possessions - we cannot be free."
-Thich Nhat Hanh

A Thought for Today

"Reading is equivalent to thinking with someone else's head instead of with one's own."
-Arthur Schopenhauer

Thirukural : Naanudamai - 9

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும
நாணின்மை நின்றக் கடை.

மு.வ உரை உரை:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

கலைஞர் உரை:
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

Explanation:
Want of manners injures one's family; but want of modesty injures one's character.

Thirukural : Naanudamai - 8

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

மு.வ உரை உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

Explanation:
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

Thought for Today

"Poetry is when an emotion has found its thought and the thought has found words."
- Robert Frost

A Thought for Today

"So much of literary sci-fi is about creating worlds that are rich and detailed and make sense at a social level. We'll create a world for people and then later present a narrative in that world."
-James Cameron

Senior Citizens : The Parking Tickets


Working people frequently ask retired people what they do to make their days interesting.

Well, for example, the other day, wife Rose Anne and I went into town and visited a shop.

When we came out, there was a cop writing out a parking ticket.

We went up to him and I said, 'Come on, man, how about giving a senior citizen a break?'

He ignored us and continued writing the ticket.

I called him an "asshole".

He glared at me and started writing another ticket for having worn-out tires.

So Roseanne called him a "shit head".
He finished the second ticket and put it on the windshield with the first.

Then he started writing more tickets.
This went on for about 20 minutes.

The more we abused him, the more tickets he wrote.

Just then our bus arrived, and we got on it and went home.

We try to have a little fun each day now that we're retired! :-)

It's important at our age to also behave like kids.

:-)

Thirukural : Naanudamai - 7

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

மு.வ உரை உரை:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

கலைஞர் உரை:
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
நாணத்தி்ன் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.

Explanation:
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

Thought for Today

"I cannot persuade myself that a beneficent and omnipotent God would have designedly created parasitic wasps with the express intention of their feeding within the living bodies of Caterpillars."
-Charles Darwin

A Thought for Today

"Women are never disarmed by compliments. Men always are. That is the difference between the sexes."
-Oscar Wilde

Thirukural : Naanudamai - 6

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

மு.வ உரை உரை:
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

கலைஞர் உரை:
பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

Explanation:
The great make modesty their barrier (of defence) and not the wide world.

Season's Greetings : Happy Pongal

இனிக்கும் பொங்கல்
இல்லத்தில் பொங்க 
வருத்தம் மறையும்
வாழ்வு மலரும்!
எதிரே தோன்றும் 
முகம் யாராகிலும்
சொல்ல தோன்றும்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Thirukural : Naanudamai - 5

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி் என்னும் உலகு.

மு.வ உரை உரை:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்தி்ற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

கலைஞர் உரை:
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி் நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

Explanation:
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.

Thirukural : Naanudamai - 4

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதி்ன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

மு.வ உரை உரை:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

கலைஞர் உரை:
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
நாணம் இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

Explanation:
The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).

Thought for Today

"The fear of becoming a 'has-been' keeps some people from becoming anything."
-Eric Hoffer

A Thought for Today

"The man who occupies the first place seldom plays the principal part."
-Johann Wolfgang von Goethe

Thirukural : Naanudamai - 3

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

மு.வ உரை உரை:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

கலைஞர் உரை:
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

Explanation:
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

Thirukural : Naanudamai - 2

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

மு.வ உரை உரை:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

கலைஞர் உரை:
உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.

சாலமன் பாப்பையா உரை:
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

Explanation:
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

Thought for Today

"The more laws and order are made prominent, the more thieves and robbers there will be."
- Lao Tzu

Thirukural : Naanudamai - 1

கருமத்தால் நாணுதல் நாணுந் தி்ருநுதல் 
நல்லவர் நாணுப் பிற.

மு.வ உரை உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

கலைஞர் உரை:
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றெ?ன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.

Explanation:
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

A Thought for Today

"If things go wrong, don't go with them."
-Roger Babson
Great Minds Quotes

Thirukural : Nandriyil selvam - 10

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

மு.வ உரை உரை:
புகழ் பொருந்தி்ய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

கலைஞர் உரை:
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.

Explanation:
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).

Thirukural : Nandriyil selvam - 6


ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

மு.வ உரை உரை:
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்தி்ற்கு ஒரு நோய் ஆவான்.

கலைஞர் உரை:
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

சாலமன் பாப்பையா உரை:
தானும் அனுபவிக்காமல், தகுதி்யானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

Explanation:
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

Thirukural : Nandriyil selvam - 9

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

மு.வ உரை உரை:
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி் அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

கலைஞர் உரை:
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்தி்க் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்தி்டும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி், அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

Explanation:
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

Thirukural : Nandriyil Selvam - 8

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

மு.வ உரை உரை:
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

கலைஞர் உரை:
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தி்ல் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!

சாலமன் பாப்பையா உரை:
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

Explanation:
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

A Thought for Today

"Some changes look negative on the surface but you will soon realize that space is being created in your life for something new to emerge."
-Eckhart Tolle

Thirukural : Nandriyil Selvam - 7

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

மு.வ உரை உரை:
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

கலைஞர் உரை:
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், தி்ருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

Explanation:
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

A Thought for Today

"My attitude is that if you push me towards something that you think is a weakness, then I will turn that perceived weakness into a strength."
-Michael Jordan  

Thought for Today

"Everybody has talent, it's just a matter of moving around until you've discovered what it is."
-George Lucas

A Thought for Today

"You can't have a better tomorrow if you are thinking about yesterday all the time."
-Charles Kettering

Thought for Today

'We will reject interesting opportunities rather than over-leverage our balance sheet.'
–Warren Buffett

Thirukural : Nandriyil selvam - 5

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

மு.வ உரை உரை:
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

கலைஞர் உரை:
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

Explanation:
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

A Thought for Today

"A man has a property in his opinions and the free communication of them."
-James Madison

Thirukural : Nandriyil Selam - 4

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

மு.வ உரை உரை:
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

கலைஞர் உரை:
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்தி்ற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்தி்ட முடியும்?

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்தி்ற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி் நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

Explanation:
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?