For this Day:

;

Thirukural : Naanudamai - 10

நாண்அகத் தி்ல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

மு.வ உரை உரை:
மனத்தி்ல் நாணம் இல்லாதவர் உலகத்தி்ல் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

கலைஞர் உரை:
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தி்ல் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

Explanation:
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.

No comments: