For this Day:

;

Thirukural : Nandriyil Selam - 4

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

மு.வ உரை உரை:
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

கலைஞர் உரை:
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்தி்ற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்தி்ட முடியும்?

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்தி்ற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி் நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

Explanation:
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?

No comments: