For this Day:

;

Thirukural : Kudi Seyal Vagai

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

மு.வ உரை உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை:
உரிய கடமையைச் செய்வதி்ல் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதி்கொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

Explanation:
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

No comments: