For this Day:

;

Thirukural : kudi seyalvagai - 10

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

மு.வ உரை உரை:
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

கலைஞர் உரை:
வரும் துன்பத்தை எதி்ர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்தி்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதி்யை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

Explanation:
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

No comments: