For this Day:

;

Thirukural : Kuripparidhal - 9

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்  காதலார் கண்ணே உள.

மு.வ. உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

கலைஞர் உரை:
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Explanation:
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

No comments: