For this Day:

;

Thirukural : Kuripparithal - 2

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்  செம்பாகம் அன்று பெரிது.

மு.வ. உரை:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

கலைஞர் உரை:
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

Explanation:
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

No comments: