For this Day:

;

Thirukural : Kuripparidhal - 3

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்  யாப்பினுள் அட்டிய நீர்.

மு.வ. உரை:
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

கலைஞர் உரை:
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

Explanation:
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

No comments: