For this Day:

;

Thirukural : Kodungonmai - 2

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

மு.வ உரை உரை:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி் நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

கலைஞர் உரை:
ஆட்சிக்கோல் ஏந்தி்யிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதி்காரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்தி்ய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says give up your wealth.

No comments: