For this Day:

;

Thirukural : Pochaavamai - 7

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

மு.வ உரை உரை:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

கலைஞர் உரை:
மறதி்யில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
மறதி் இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

Explanation:
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

No comments: