For this Day:

;

Thirukural : Pochaavamai - 4

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

மு.வ உரை உரை:
உள்ளத்தி்ல் அச்சம் உடையவர்க்குப் புறத்தி்லே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி் உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

கலைஞர் உரை:
பயத்தி்னால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி் உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி் உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

Explanation:
Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

No comments: