For this Day:

;

Thirukural : Virunthombal - 8

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

மு.வ உரை உரை:
விருந்தி்னரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்தி்க்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

கலைஞர் உரை:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னரைப் பேணி, அந்த யாகத்தி்ன் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

Explanation:
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, we have laboured and laid up wealth and are now without support.

No comments: