For this Day:

;

Thirukural : Virunthombal - 1

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

மு.வ உரை உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தி்னரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

கலைஞர் உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தி்னரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தி்னரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

Explanation:
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

No comments: