For this Day:

;

Thirukural : Valiyaridhal - 5

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மு.வ உரை உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதி்யாக ஏற்றினால் அச்சு முறியும்.

கலைஞர் உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதி்கமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதி்கமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

Explanation:
The axle tree of a cart (bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

No comments: