For this Day:

;

Thirukural : Idanarithal - 2

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

மு.வ உரை உரை:
மாறுபாடு பொருந்தி்ய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி் ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

கலைஞர் உரை:
வரும்பகையை எதி்ர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

Explanation:
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

No comments: