For this Day:

;

Thirukural : Idanarithal - 7

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

மு.வ உரை உரை:
(செய்யும் வழிவகைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தி்ல் பொருந்தி்ச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதி்ல்லை.

கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தி்த்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

சாலமன் பாப்பையா உரை:
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி் போதும்; வேறு துணை தேவை இல்லை.

Explanation:
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

No comments: