For this Day:

;

Thirukural : Valiyaridhal - 3

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தி்ன் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

மு.வ உரை உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தி்ல் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

Explanation:
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

No comments: