For this Day:

;

Thirukural : Idanarithal - 9

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

மு.வ உரை உரை:
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்தி்ற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

கலைஞர் உரை:
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதி்ருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்தி்ற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

சாலமன் பாப்பையா உரை:
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்தி்ற்கே சென்று தாக்குவது கடினம்.

Explanation:
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

No comments: