For this Day:

;

Thirukural : Kaalamaridhal - 8

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

மு.வ உரை உரை:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

கலைஞர் உரை:
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்தி்டும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

Explanation:
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

No comments: