For this Day:

;

Thirukural : Madiyinmai - 8

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு  அடிமை புகுத்தி விடும்.

மு.வ உரை உரை:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால் அஃது அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

கலைஞர் உரை:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

Explanation:
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

No comments: