For this Day:

;

Thirukural : Madiyinmai - 5

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

மு.வ உரை உரை:
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி், அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

கலைஞர் உரை:
காலம் தாழ்த்துதல், மறதி், சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

சாலமன் பாப்பையா உரை:
காலம் தாழ்த்தி் செய்வது, மறதி், சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

Explanation:
Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.

No comments: