For this Day:

;

Thirukural : Idikkanazhiyaamai - 2

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தி்ன் உள்ளக் கெடும்.

மு.வ உரை உரை:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தி்னால் அத் துன்பத்தி்ன் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

கலைஞர் உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த  மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

Explanation:
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

No comments: