For this Day:

;

Thirukural : Aalvinaiyudamai - 4

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை  வாளாண்மை போலக் கெடும்.

மு.வ உரை உரை:
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

கலைஞர் உரை:
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

Explanation:
The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

No comments: