For this Day:

;

Thirukural : Naanuthuravuruththal - 5

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மு.வ. உரை:
மடலோறுதலோடு மாலைக்காலத்தி்ல் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

கலைஞர் உரை:
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.

சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்தி்ருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

Explanation:
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

No comments: