For this Day:

;

Thirukural : Kaatharsirappuraiththal - 10

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதி்லர் என்னும்இவ் வூர்.

மு.வ. உரை:
காதலர் எப்போதும் என் உள்ளத்தி்ல் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

கலைஞர் உரை:
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.

சாலமன் பாப்பையா உரை:
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

Explanation:
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

No comments: