For this Day:

;

Thirukural : Naanuthuravuraiththal -9

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

மு.வ. உரை:
அமைதி்யாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி் என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

கலைஞர் உரை:
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் தி்ரிகின்றது போலும்!

சாலமன் பாப்பையா உரை:
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

Explanation:
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

No comments: