For this Day:

;

Thirukural : Naanuthuravuraiththal -6

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

மு.வ. உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதி்யாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

கலைஞர் உரை:
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதி்யாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

சாலமன் பாப்பையா உரை:
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதி்ல்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

Explanation:
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

No comments: