For this Day:

;

Thirukural : Alararivuruththal - 2

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததி்வ் வூர்.

மு.வ. உரை:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி் அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

கலைஞர் உரை:
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

சாலமன் பாப்பையா உரை:
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்தி்க்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

Explanation:
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

No comments: