For this Day:

;

Thirukural : Naanuthuravuraiththal-7

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தி்ல்.

மு.வ. உரை:
கடல் போன்ற காமநோயால் வருந்தி்யும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

கலைஞர் உரை:
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தி்னாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்தி்ருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தி்ல் வேறு இல்லை.

Explanation:
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

No comments: