For this Day:

;

Thirukural : Naanuthuravuraiththal - 8

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

மு.வ. உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்தி்ருத்தலைக் கடந்து மன்றத்தி்லும் வெளிப்படுகின்றதே.

கலைஞர் உரை:
பாவம்; இவர், மனத்தி்ல் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்தி்ற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.

சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

Explanation:
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

No comments: