For this Day:

;

Thirukural : Naanuthuravuraiththal- 1

காமம் உழந்து வருந்தி்னார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

மு.வ. உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தி்னவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை:
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

Explanation:
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

No comments: