For this Day:

;

Thirukural : Vinaicheyalvagai - 7

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை  உள்ளறிவான் உள்ளம் கொளல்.

மு.வ உரை உரை:
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.

கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

Explanation:
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

No comments: