For this Day:

;

Thirukural : Thoodhu - 9

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

மு.வ உரை உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி் உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதி்யுடையவன்.

கலைஞர் உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தி்யை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்தி்க்க நேரும் ஆபத்தி்ற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தி்யையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

No comments: