For this Day:

;

Thirukural : Avaianjaamai - 7

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

மு.வ உரை உரை:
அவையினிடத்தி்ல் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தி்ல் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

கலைஞர் உரை:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்தி்ருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தி்ல் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

No comments: