For this Day:

;

Thirukural : Avaiyarithal - 9

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

மு.வ உரை உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதி்ல் பதி்யுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தி்ல் மறந்தும் பேசக் கூடாது.

கலைஞர் உரை:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தி்ல் பதி்யும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

சாலமன் பாப்பையா உரை:
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் தி்றம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் தி்றம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

Explanation:
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

No comments: