For this Day:

;

Thirukural : Avaiyarithal - 5

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

மு.வ உரை உரை:
அறிவு மிகுந்தவரிடையே முந்தி்ச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

கலைஞர் உரை:
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தி்ல் முந்தி்ரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

Explanation:
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

No comments: