For this Day:

;

Thirukural : Avaiyarithal - 8

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தி்யுள் நீர்சொரிந் தற்று.

மு.வ உரை உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தி்யில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

கலைஞர் உரை:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தி்யில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் தி்றம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தி்யில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

Explanation:
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

No comments: