For this Day:

;

Thirukural : Avaiyarithal - 10

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

மு.வ உரை உரை:
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தி்ல் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தி்ல் சிந்தி்ய அமிழ்தம் போன்றது.

கலைஞர் உரை:
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தி்ல் சிந்தி்டும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Explanation:
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

No comments: