For this Day:

;

Thirukural : Therinthu vinaiyaadal - 4

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

மு.வ உரை உரை:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தி்ல் பலர் உண்டு.

கலைஞர் உரை:
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் தி்றத்தால், எதி்ர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

Explanation:
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

No comments: