For this Day:

;

Thirukural : Therinthu Thelithal - 4

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மு.வ உரை உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,  மிகுதி்யானவை எவையென ஆராய்ந்து, மிகுந்தி்ப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதி்யாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதி்கமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதி்யைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Explanation:
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

No comments: