For this Day:

;

Thirukural : Therinthu Thelithal - 2

குடிப்பிறந்து குற்றத்தி்ன் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

மு.வ உரை உரை:
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்தி்ட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Explanation:
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

No comments: