For this Day:

;

Thirukural : Ottraadal -10

சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்  புறப்படுத்தான் ஆகும் மறை.

மு.வ உரை உரை:
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

கலைஞர் உரை:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து செல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

Explanation:
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.

No comments: