For this Day:

;

Thirukural : Kannottam - 9

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

மு.வ உரை உரை:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்தி்லும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

கலைஞர் உரை:
அழிக்க நினைத்தி்டும் இயல்புடையவரிடத்தி்லும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்தி்லும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

Explanation:
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

No comments: