For this Day:

;

Thirukural : Kannottam - 4

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

மு.வ உரை உரை:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தி்ல் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

கலைஞர் உரை:
அகத்தி்ல் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தி்ல் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

Explanation:
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

No comments: