For this Day:

;

Thirukural : Kannottam - 2

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்்
உண்மை நிலக்குப் பொறை.

மு.வ உரை உரை:
கண்ணோட்டத்தி்னால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்தி்ற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

கலைஞர் உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

Explanation:
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

No comments: