For this Day:

;

Thirukural : Thuravu - 5

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

மு.வ.உரை:
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?

கலைஞர் உரை:
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?

சாலமன் பாப்பையா உரை:
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை?யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதி்கம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?

Explanation:
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

No comments: